நடுநிலையாக செயல்படு!

தவிர்ப்பது நல்லது தான்.

ஆனால், அது அனைத்து

நேரங்களிலும் அல்ல.

“நடுநிலையாக செயல்படு”

–   கவிதை குழல்.

நடுநிலையாக செயல்படு! | Kavithai Kuzhal 2020

கவிதைக்கான விளக்கமும் அறிக:

ஒருவர் தனக்கு ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து தற்காத்து கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும்.

ஒருவர் பிரச்சனைக்கு செல்லாமல் இருந்தபோதிலும், தன்னிடம் வந்தால் என்ன செய்வது!.

இதுபோன்ற சூழ்நிலையானது என்றாவது ஏற்பட்டதுன்டா?.

பிரச்சனை கொண்டு வருபவர் எவராயாயினும், அந்த பிரச்சனையில் அந்நபர் எவ்வழியில் செல்கிறார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

வழி என்றால் தர்ம வழியா (அ) அதர்ம வழியா?.

தர்ம வழியில் செல்பவருக்கு துணைநின்று, அறிவுரையை வழங்கலாம்.

அதர்ம வழியை பின்பற்றினால், அவரிடம் விலகி இருப்பது சாலச்சிறந்தது.

பிரச்சனைகளை தவிர்ப்பது நல்லது என்றாலும், தர்மத்தை நிலைநாட்ட போராட வேண்டும்.

சிந்தித்து செயல்படுங்கள்.

நன்றி!

–  கவிதை குழல்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *